Published : 21 Jan 2015 01:55 PM
Last Updated : 21 Jan 2015 01:55 PM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: கேஜ்ரிவால் மனு தாக்கல்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 7-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவாலும், பாஜக சார்பில் கிரண் பேடியும் முதல்வர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று (செவ்வாய்கிழமை) மனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கேஜ்ரிவால் வேட்பு மனு தாக்கலை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இன்று தனது ஆதரவாளர்கள் வெகு சிலருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், "டெல்லி மக்கள், ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பெறச் செய்வார்கள். அதற்கு அவர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x