Published : 02 Jan 2015 01:04 PM
Last Updated : 02 Jan 2015 01:04 PM
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக சிலர் வெடிகுண்டி தயாரிக்கும்போது குண்டு வெடித்து விபத்து நேர்ந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்துவானில் சில நபர்கள் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரிக்கும் வேலையை செய்துவந்துள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வெடிகுண்டு தயாரிப்பின்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து விபத்து நேரிட்டது. இதில் சிக்கிய 2 பேர் படுகாயங்களுடன் துர்காபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து துர்காப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, காயமடைந்த இருவரும் தங்களது கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை குறிவைத்து பாஜகவினர் குண்டு வீசியதாகவும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதனை மறுத்துள்ள பாஜக, "திரிணமூல் கட்சியினர் முறைகேடாக வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது குண்டுவெடித்து விபத்து ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT