Published : 14 Jan 2015 03:19 PM
Last Updated : 14 Jan 2015 03:19 PM

இத்தாலி மாலுமி மனு ஏற்பு: சொந்த நாட்டில் தங்கியிருக்க மேலும் 3 மாதங்களுக்கு கெடு நீட்டிப்பு

இத்தாலி மாலுமி மசிமிலானோ லட்டோர் மேலும் 3 மாதங்களுக்கு அவரது சொந்த நாட்டில் தங்கியிருக்க கெடுவை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு கேரள கடல் பகுதியில் மீனவர்கள் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மாலுமி மசிமிலானோ லட்டோர், தற்போது இத்தாலியில் உள்ளார். இத்தாலியில் தங்கியிருப்பதற்கான கெடு முடிவடையவுள்ள நிலையில், இத்தாலியில் தங்கியிருக்க காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, அவர் மனு மீதான விசாரணையை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றியதோடு, விசாரணை இன்று (புதன் கிழமை) முதல் நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இத்தாலி மாலுமி மசிமிலானோ லட்டோர் மேலும் 3 மாதங்களுக்கு அவரது சொந்த நாட்டில் தங்கியிருக்க கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x