Published : 27 Jan 2015 10:20 AM
Last Updated : 27 Jan 2015 10:20 AM

அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்த புல்லட் ரயில்

டெல்லி, குடியரசு தின விழா அணிவகுப்பில் ரயில்வே துறை சார்பில் இடம்பெற்ற, புல்லட் ரயில் வடிவம் தாங்கிய காட்சி ஊர்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதிவேக ரயில்கள் இயக்குவது என்ற ரயில்வே துறையின் குறிக்கோளை வெளிப்படுத்துவ தாக இது அமைந்திருந்தது.

‘எதிர்காலத்தை நோக்கிய முன்னேற்றப் பாதையில் இந்திய ரயில்வே’ என்ற கருப்பொருளுடன் இந்தக் காட்சி ஊர்தியை ரயில்வே ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் காட்சி ஊர்தி வந்தபோது, விஐபி பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு எழுந்துநின்று, வெற்றி என்பதை குறிக்கும் வகையில் இரு விரல்களை காட்டினார். மும்பை ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் இயக்கு வது தொடர்பாக தற்போது சாத்தி யக்கூறு ஆய்வினை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்தை தனியாருடன் இணைந்து நிறைவேற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதிவேக ரயில்கள், ரயில்நிலைய கட்டமைப்பு வசதிகள், பயணிகள் முனையங்கள், பெண் பணியாளர்களை அதிகரித்தல் என ரயில்வே துறையில் மேற்கொள் ளப்பட்டு வரும் மாற்றங்களையும் அணிவகுப்பு விழா கருப்பொருள் உணர்த்தியது. ரயில்வே துறையில் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த பணிகளில் தற்போது பெண்களும் நியமிக்கப் படுகின்றனர். இன்ஜின் டிரைவர், நிலைய மேலாளர், கார்டுகள், பிட்டர்கள், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் என பல்வேறு பணிகளில் பெண்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர்.

குடியரசு தின விழா அணி வகுப்பில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் தங்கள் பாரம் பரிய உடையில் ஆயுதமேந்தி அணிவகுந்து வந்தனர்.

ரயில்வே சொத்துகளை பாது காப்பதும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் ரயில்வே பாதுகாப்பு படையின் பணியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x