Published : 05 Jan 2015 12:51 PM
Last Updated : 05 Jan 2015 12:51 PM
ரயில்களில் அதிக கொள்திறன் கொண்ட, பயன்படுத்துவதற்கு எளிதான குப்பைத் தொட்டிகள் விரைவில் நிறுவப்பட உள்ளன. ஏசி, படுக்கை வசதி கொண்ட சில பெட்டிகள் தவிர பெரும்பாலான பெட்டிகளில் தற்போது குப்பைத் தொட்டி வசதி இல்லை.
எனவே, ரயில்பெட்டிகளில் குப்பைகள் தேங்கி விடுகின்றன. இதனைத் தவிர்க்க பயன் படுத்துவதற்கு எளிதான, அதிக கொள்திறன் கொண்ட பெட்டி கள் விரைவில் பொருத்தப்பட வுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, “தற்போதுள்ள குப்பைத் தொட்டிகள், குப்பைகளைச் சேகரிக்க போதுமானவையாக இல்லை. எனவே, என்ஐடி நிறு வனத்திடம், மேம்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளை வடி வமைக்கச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT