Published : 12 Dec 2014 03:21 PM
Last Updated : 12 Dec 2014 03:21 PM
உத்தரப்பிரதேசத்தில் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஆசிரியை போலீஸார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் செல்போனில் ஆபாச காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளிடம் ஆசிரியை செல்போனில் இருந்த ஆபாச காட்சிகளை காட்டியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து சென்ற பெண் குழந்தைகள் வகுப்பில் இருந்த மற்றவர்களுக்கும் இதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். ஆசிரியை தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆசிரியை வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீஸார், அதிலிருந்த காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT