Published : 02 Dec 2014 03:46 PM
Last Updated : 02 Dec 2014 03:46 PM
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று 2-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இன்று வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
அப்போது அவர்களை குறிவைத்து ராணுவ வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT