Published : 16 Dec 2014 12:13 PM
Last Updated : 16 Dec 2014 12:13 PM

நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா ஆயத்தமாக இருக்கிறது: மனோகர் பரிக்கர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொதுமக்களை மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதியாக பிடித்து வைத்த சம்பவம் போன்ற நெருக்கடி நிலைகளை சமாளிக்க இந்தியா ஆயத்தமாக இருக்கிறது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.

சிட்னி நகரில் உணவகத்தில் நடந்த சம்பவம் போன்ற நெருக்கடி நிலை ஏற்பட்டால் இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என மனோகர் பரிக்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனோகர் பரிக்கர், "சிட்னி நகரில், பொதுமக்களை மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதியாக பிடித்து வைத்த சம்பவம் போன்ற நெருக்கடி நிலைகளை சமாளிக்க இந்தியா ஆயத்தமாக இருக்கிறது.

முன்பு இருந்த நிலைமையை விட இப்போது பாதுகாப்பு, கண்காணிப்பு துறைகள் பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

நெருக்கடி நிலையின் தன்மை வெவ்வேறாக இருக்கும். இருப்பினும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x