Published : 10 Dec 2014 01:06 PM
Last Updated : 10 Dec 2014 01:06 PM

பேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம்

மும்பை ஐஐடி மாணவி ஆஸ்தா அகர்வாலுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

20 வயதாகும் ஆஸ்தா இப் போது ஐஐடியில் 4-வது ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்து வருகிறார். கடந்த மே மாதம் கலி போர்னியாவில் பேஸ்புக் தலைமை யகத்தில் தனது “இன்டர்ன் ஷிப்” பயிற்சியை முடித்தார். அப் போது அவரது திறமையை அடை யாளம் கண்டுகொண்ட பேஸ்புக் நிறுவனம் அவருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இது குறித்து ஆஸ்தா கூறியதாவது:

எனக்கு கிடைத்துள்ள இந்த வேலை மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. “இன்டர்ன்ஷிப்பில்” எனது பணியில் திருப்தியடைந்ததால்தான் இந்த வாய்ப்பை பேஸ்புக் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. எனது படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆண்டு அக்டோபரில் பணியில் இணைவேன் என்றார்.

ஆஸ்தாவின் அப்பா அசோக் அகர்வால், ராஜஸ்தான் மாநில மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்தாவின் சகோதரி கெமிக்கல் இன்ஜினீயராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x