Last Updated : 01 Dec, 2014 11:48 AM

 

Published : 01 Dec 2014 11:48 AM
Last Updated : 01 Dec 2014 11:48 AM

‘வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்களை தடுக்க உதவுங்கள்’

வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண ரயில்வே துறை ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது.

இதுகுறித்து, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறிய தாவது:

பெற்றோர் மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளி யேறும் 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.

டிக்கெட் இல்லாமலேயே இவர் கள் பயணம் செய்கின்றனர். டிக் கெட் பரிசோதகர்கள் முனைப்பு காட்டாததால்தான் இது சாத்தியமாகிறது.

மாதந்தோறும் சுமார் 700 சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் மூலம் டெல்லி வருகிறார்கள். இந்த விஷயத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் விழிப்புடன் செயல்பட்டு சிறுவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x