Published : 31 Dec 2014 05:33 PM
Last Updated : 31 Dec 2014 05:33 PM
நீதிபதிகள் நியமன கமிஷன் குறித்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முன்பிருந்த ‘கொலீஜியம்’ முறை இனி நடைமுறையில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய நீதிபதிகள் நியமன கமிஷன் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனுக்கு தலைமை நீதிபதி தலைவராக இருப்பார். இவர் தவிர, உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள், இரண்டு தகுதி உடைய நபர்கள், மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT