Published : 03 Apr 2014 09:35 AM
Last Updated : 03 Apr 2014 09:35 AM

மகளிர் மட்டுமே பணிபுரியும் 9 வாக்குப் பதிவு மையங்கள்

வரும் மக்களவைத் தேர்தலின் போது, திரிபுரா மாநிலத்தில் 9 அனைத்து மகளிர் வாக்குப் பதிவு மையங்களை அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி அஷுதோஷ் ஜிண்டால் புதன்கிழமை கூறிய தாவது: முந்தைய தேர்தல் காலங்களில் பெண் தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக செயல் பட்டதைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட 9 வாக்குப் பதிவு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 3,095 வாக்குப் பதிவு மையங்களில் 60 பெண்கள் உட்பட 19 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x