தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: ​​கா​விரி​யில் தமிழகத்​துக்கு மே மாதத்​தில் வழங்க வேண்​டிய 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்​நாடகா​வுக்கு காவிரி மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 50-வது கூட்​டம் அதன் தலைவர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று டெல்​லி​யில் நடைபெற்​றது. அதில் தமிழகம், கர்​நாட​கா, கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களின் நீர்​வளத்​துறை அதி​காரி​கள் காணொலி வாயி​லாக பங்​கேற்​றனர். அப்​போது கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்த 4 அணை​களின் நீர்​மட்​டம், நீர்வரத்து, வெளி​யேற்​றம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

பின்​னர் தமிழக அரசின் சார்​பில், "கோடை காலம் என்​ப​தால் மேட்டூர் அணை​யின் நீர்​மட்​டம் குறைந்து வரு​கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி மே மாதத்​தில் தமிழகத்துக்கு கர்​நாடகா 2.5 டிஎம்சி நீரை திறந்​து​விட வேண்​டும். அந்த நீரை பிலிகுண்​டுலு சோதனை நிலை​யத்​தில் மே மாத இறுதிக்​குள் கர்​நாடக அரசு உறு​திப்​படுத்த வேண்​டும்" என வலியுறுத்​தி​னார்.

இதை ஏற்​று​கொண்ட ஆணைய தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர், "தமிழகத்​துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை கர்​​நாட​கா திறந்​து​விட வேண்​டும்​" என உத்​தர​விட்​​டார்​.

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு
‘மதுரை சித்திரைத் திருவிழா’ ஓர் ஆன்மிக கொண்டாட்டம் மட்டுமே அல்ல... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in