Last Updated : 19 Dec, 2014 12:47 PM

 

Published : 19 Dec 2014 12:47 PM
Last Updated : 19 Dec 2014 12:47 PM

கல்வியில் இட ஒதுக்கீடு: மகாராஷ்டிர அரசின் மனு நிராகரிப்பு

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரிய மகாராஷ்டிர அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்தா பிரிவினருக்கு 16 சதவீதமும் முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மாநில அரசு பிறப்பித்தது.

எனினும், இந்த அவசர சட்டத்தை அமல்படுத்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 14-ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x