Published : 24 Nov 2014 08:35 AM
Last Updated : 24 Nov 2014 08:35 AM

காங்கிரஸ் தலைவரை தோற்கடிக்க போட்ட சபதம் நிறைவேறியது: 9 ஆண்டுகள் வெறுங்காலுடன் நடந்த சிவசேனா தொண்டருக்கு தங்க காலணிகள்

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானேவை தோற்கடிக்க சபதமிட்டு 9 ஆண்டுகள் வெறுங்காலுடன் நடந்த சிவசேனா தொண்டருக்கு தங்க காலணிகள் வழங்கப்பட்டன.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவராக இருந்த நாராயண் ரானே 2005-ம் ஆண்டில் காங் கிரஸில் இணைந்தார். மால்வன் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இதில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இது சிவசேனா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கொங்கன் பிராந்தியம் சிந்துதுர்க் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் போன்ஸ்லே, நாராயண் ரானேவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஆனால் அவர் சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததை அரவிந்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாராயண் ரானே 2005-ம் ஆண்டில் மால்வன் தொகுதி யில் வெற்றிபெற்றபோது வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் இருந்த அரவிந்த் போன்ஸ்லே தான் அணிந்திருந்த காலணிகளை கழற்றி எறிந்தார். நாராயண் ரானேவை சிவசேனா தோற்கடிக்கும் வரையில் காலணி அணியமாட்டேன் என்று அன்றைய தினம் அவர் சபதமிட்டார்.

ஆனால் 2009-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாராயண் ராணே வெற்றிபெற்றார். இதனால் அர்விந்தின் சபதமும் தொடர்ந்தது.

கடந்த அக்டோபரில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் வைபவ் நாயக் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயண் ரானேவை தோற்கடித்தார்.

இதனை சிவசேனா தொண் டர்கள் பெரும் வெற்றிவிழாவாக கொண்டாடினர். கடந்த 9 ஆண்டுகளாக காலணி அணியாமல் வெறுங்காலுடன் நடந்த அரவிந்தும் தனது சபதத்தை கைவிட்டார்.

சிவசேனாவின் மூத்த தலை வர்கள் பலர் அரவிந்துக்கு புத்தம் புதிய காலணிகளை பரிசாக வழங் கினார். தற்போது புதிதாக கடை திறக்கும் அளவுக்கு அவரிடம் காலணிகள் குவிந்துவிட்டன. இதில் கிஷோரி பட்னாகர் என்பவர் அரவிந்துக்காக தங்கத்தில் காலணி களை தயாரித்துள்ளார்.

50 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட இந்த காலணிகளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வென்குர்லா நகரில் நேற்று அரவிந்திடம் வழங்கினார்.

இதுகுறித்து அரவிந்த் கூறிய போது, சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு நாராயண் ரானே செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை. சிந்துதுர்கா மாவட்டம் ரானேவின் கோட்டை என்று கருதப்பட்டது. அதனை நாங்கள் தகர்த்துவிட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x