Published : 04 Nov 2014 11:15 AM
Last Updated : 04 Nov 2014 11:15 AM
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், ஆத்மகூர் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி ஆகிய இரு வங்கிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, நேற்று காலை மர்ம நபர் ஒருவர் போலீஸ் அவசர எண் 100-க்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று சுமார் 2 மணி நேரம் சோதனையிட்டனர். ஆனால், இது வெறும் புரளி என தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (இன்று) முகரம் அரசு விடுமுறை என்ப தால், நேற்று வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலை யில், வெடிகுண்டு மிரட்டலால் பணிகள் பாதிக்கப்பட்டதில், வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT