Published : 18 Nov 2014 02:58 PM
Last Updated : 18 Nov 2014 02:58 PM

மியான்மர் தீவிரவாதி ஹைதராபாத்தில் கைது

மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என் ஐஏ) அதிகாரிகள் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்தனர்.

மேற்கு வங்கம் மாநிலம், புர்த்வான் நகரில் உள்ள காக்ராகட் பகுதியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. இதில் இருவர் உயிரி ழந்தனர். இவர்கள் ஜே.எம்.பி . தீவிரவாத கும்பலை சேர்ந்தவர் கள் என போலீஸார் சந்தேகிக் கின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சொஜித் எனும் தீவிரவாதியை மேற்கு வங்க போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி) அமைப்பை சேர்ந்த இவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக் கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மியான்மரைச் சேர்ந்த கலீத் என்கிற முகமது கலீத் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x