Published : 02 Jul 2019 01:39 PM
Last Updated : 02 Jul 2019 01:39 PM

மும்பை சாலைகளில் குளம்போல் சூழ்ந்த தண்ணீர்; தவிக்கும் மக்கள்: வீடியோ

மும்பையில் கொட்டித் தீர்க்கும் மழையால்சாலைகள் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

தென் மேற்கு பருவமழையால் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 400 செ.மீ மழை பெய்ததால், நகரின் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

புறநகர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்தது விழுந்ததில் 13 பேரும், புனேயில் கல்வி நிறுவனத்தின் சுவர் இடிந்ததில் 6 பேர் என மொத்தம் 19 பேர் பலியானார்கள். கனமழையால் விமானம், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன.

மும்பையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்களை மூழ்கச் செய்யும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் அவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை சகிந்தா காவல்நிலையத்திற்குள் மழை நீர் புகுந்தது.

புனே, மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும்  மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x