Last Updated : 05 Jul, 2019 05:21 PM

 

Published : 05 Jul 2019 05:21 PM
Last Updated : 05 Jul 2019 05:21 PM

மேற்கு வங்கத்தை பங்களா என மாற்ற பாஜகவினர் எதிர்கிறார்கள்: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தை பங்களா என மாற்ற பாஜகவின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று மம்தா பானர்ஜி பேசியதாவது:

"நாங்கள் 2003 முதல் முயற்சித்து வருகிறோம், ஆனால் இன்றுவரை அது நடக்கவில்லை. வங்காளத்தின் உரிமைகள் ஏன் பறிக்கப்படுகிறது? எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும்,

பாஜக தலைவர்களில் ஒரு பகுதியினர் பெயர் மாற்றத்தை எதிர்க்கின்றனர். இது அரசியல் நோக்கம் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக நான் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளேன்''

இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டுமென மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமெனவும் மோடியிடம் கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர் மறுப்பு

''மேற்கு வங்காளத்திற்கு 'பங்களா' என்ற பெயர் சரியாக இல்லை'' என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை மேற்குவங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிதபிரதா பானர்ஜியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மேலும் ''ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது, மேலும் இது தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி, மேற்கு வங்க சட்டமன்றம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் 'பங்களா' என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x