Last Updated : 08 Jul, 2019 01:35 PM

 

Published : 08 Jul 2019 01:35 PM
Last Updated : 08 Jul 2019 01:35 PM

புர்ஹான் வானியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம்: ஸ்ரீநகரில் கடையடைப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படைத் தளபதி புர்ஹான் வானியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக ஸ்ரீநகரில் அனைத்துக் கடைகளும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இன்று மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பொதுப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

பிரச்சினைக்குரிய பகுதிகளில் போராட்டம் நடத்தப்படுவதைத் தடுக்கவும் மற்றும் பள்ளத்தாக்கில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பாதுகாப்புப் படைகள் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மொபைல் டேட்டா வேகம் 2ஜி ஆகக் குறைக்கப்பட்டு,  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் என்ற வகையில், கடந்த 2016-ல் இதேநாளில் புர்ஹான் வானி இந்தியப் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து 53 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x