Published : 28 Aug 2017 10:00 AM
Last Updated : 28 Aug 2017 10:00 AM

தெலங்கானாவில்1 கோடி பேருக்கு இலவச சேலை

தமிழகத்தில் ஆடித் திருவிழா போல, தெலங்கானா மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரேஷன் கடைகள் மூலம் 1 கோடியே 4 லட்சத்து 610 பெண்களுக்கு இலவச கைத்தறி சேலை வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு இவை வழங்கப்படும்.

ரம்ஜானுக்கு முஸ்லிம் பெண்களுக்கும் கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவ பெண்களுக்கும் இலவச சேலை வழங்கப்படுகிறது. அதுபோல் பதுகம்மா பண்டிகைக்கு இந்து பெண்களுக்கும் இலவச சேலை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களின் பிரச்சினைகள் தீரவும் இத்திட்டம் உதவும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x