Published : 09 Aug 2017 09:07 AM
Last Updated : 09 Aug 2017 09:07 AM

நடிகர் திலீப்பின் காவல் நீட்டிப்பு

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்பின் நீதிமன்றக் காவலை நீட்டித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு, ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து, கொச்சி நீதிமன்றத்தில் திலீப் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை கடந்த ஜூலை 24-ம் தேதி தள்ளுபடி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x