Last Updated : 02 Nov, 2014 11:31 AM

 

Published : 02 Nov 2014 11:31 AM
Last Updated : 02 Nov 2014 11:31 AM

5 காசுக்காக வழக்கு

1973-ம் ஆண்டில் டெல்லி போக்குவரத்து கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துநர் ரன்பீர் சிங், பயணி ஒருவருக்கு 15 காசுக்கான டிக்கெட்டுக்கு 10 காசை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

துறை ரீதியாக நடத்தப்படட விசாரணையின் இறுதியில், கடந்த 1976-ம் ஆண்டு ரன்பீர் சிங் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் டி.டி.சி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை வரும் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி கேட்டிருந்தார். இது தொடர்பாக பதிலளித்த டி.டி.சி. இதுவரை ரூ.47,795 செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x