Published : 28 Nov 2014 12:06 PM
Last Updated : 28 Nov 2014 12:06 PM
கடந்த 15-ம் தேதி வரை 70.43 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட் டுள்ளன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் திட்டத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கும், 8 மாநிலங் கள்/யூனியன் பிரதேசங்களில் 75 முதல் 90 சதவீதம் பேருக்கும், மற்ற பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கும் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 15-ம் தேதி வரை 70.43 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. ஆதார் திட்டத்துக்காக 2009-10ம் ஆண்டு முதல் 2016-2017-ம் ஆண்டு வரைக்கும் ரூ. 13,663.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை 5,181 கோடி செலவிட்டுள்ளது.
புதிதாக செல்போன் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்டுப் பெற்று, அத்தகவலைப் பாதுகாக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT