Published : 03 Aug 2017 09:55 AM
Last Updated : 03 Aug 2017 09:55 AM

ஆந்திராவில் 1.5 டன் செம்மரம் பறிமுதல்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து மினி லாரி மூலம் சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் செம்மரங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து திருப்பதி அதிரடிப்படை போலீஸார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சென்னைக்கு மினி லாரியில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது, ஆரம்பாக்கம் அருகே பொன்னேரி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் இந்த வாகனத்தை சோதனையிட்டதில் 1.5 டன் செம்மரங்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் செம்மரங்களை வேனோடு பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த திருப்பதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x