Published : 15 Aug 2017 11:00 AM
Last Updated : 15 Aug 2017 11:00 AM

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

காஷ்மீரின் ஜம்மு பகுதி டாங்தர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்முவின் டாங்தர் பகுதியைச் சேர்ந்த தாட், சாத், காதி சைதாபோரா ஆகிய இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தானியங்கி துப்பாக்கியால் சுட்டது. அதிகாலை 2.20 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடைபெற்றது. இந்திய தரப்பில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

காஷ்மீரின் பட்காம் மாவட்டம், மாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தனர். இதனிடையே தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அவ்நீரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் முகமது என்பவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x