Published : 12 Jul 2017 08:38 AM
Last Updated : 12 Jul 2017 08:38 AM
“அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடியை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீ ரில் அமர்நாத் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடியை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை அனுமதிக்க கூடாது. இதுபோன்ற தாக்குதல்களால் இந்தியாவை தீவிரவாதி களால் அச்சுறுத்த முடியாது” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ரன்தீப் எஸ் சுர்ஜிவாலா கூறும்போது, ‘‘தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான பஸ் அமர்நாத் கோயில் நிர்வாகத் திடம் பதிவு செய்யப்பட வில்லை குளறுபடிகள்தான் தாக்குதலுக்கு வாய்ப்பை ஏற் படுத்தி தந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT