Published : 19 Nov 2014 11:12 AM
Last Updated : 19 Nov 2014 11:12 AM

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 27ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவை போன்று, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு விழா, தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இரவு, சிறிய சேஷ வாகனத்தில் தாயார் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தொடர்ந்து நாளை 20-ம் தேதி காலை பெரிய சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 21-ம் தேதி காலை முத்துப் பல்லக்கு வாகனம், இரவு சிம்ம வாகனம், 22-ம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு அனுமன் வாகனம், 23-ம் தேதி காலை பல்லக்கு வாகனம், இரவு யானை வாகனம் ஆகிய சேவைகள் நடைபெற உள்ளன.தொடர்ந்து 24-ம் தேதி காலை சர்வ பூபாள வாகனம், மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன சேவையும் நடைபெறும்.

பின்னர் 25-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை, 26-ம் தேதி காலை தேர்த் திருவிழா, இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறும்.

நிறைவு நாளான 27-ம் தேதி காலை கோயில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தம் நடைபெறும். பின்னர் பிரம்மோற்சவ கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் 28-ம் தேதி தாயாருக்கு புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. மேலும் பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் நேற்று தாயாருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் தங்க சடாரியை காணிக்கையாக வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x