Published : 28 Jul 2017 02:31 PM
Last Updated : 28 Jul 2017 02:31 PM

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி

பிஹார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.

பாஜகவுடன் ஆதரவோடு பிஹாரில் ஆட்சி அமைந்துள்ள நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது.

243 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணிக்கு 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுள்ளனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த 80 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்களும் நிதிஷ் குமார் கூட்டணிக்கு எதிராக வாக்களித்தனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க 123 உறுப்பினர்கள் ஆதரவே போதுமானது என்ற நிலையில் நிதிஷ்க்கு 131 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில்ல் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைத்துள்ளார். பிஹார் ஆளு நர் தேசிய ஜன நாயகக் கூட்டணி இரண்டு நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x