Last Updated : 11 Jul, 2017 10:05 AM

 

Published : 11 Jul 2017 10:05 AM
Last Updated : 11 Jul 2017 10:05 AM

லஷ்கர் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: காஷ்மீர் மாநிலத்தில் 2 பேர் சுற்றிவளைப்பு- ஏடிஎம் கொள்ளை, தீவிரவாத செயலில் ஈடுபட்டது அம்பலம்

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்தி ருந்ததாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேரை கைது செய்திருப்பதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர். இவர்கள் ஏடிஎம் கொள்ளை மற்றும் தீவிரவாத செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி முனிர் கான் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரில் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 1-ம் தேதி பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் பலியான லஷ்கர் அமைப்பின் கமாண்டர் பஷிர் லஷ்கரி தங்கி யிருந்த வீட்டிலிருந்து சந்தீப் குமார் சர்மா என்ற அடிலை போலீஸார் கைது செய்தனர். இவர் உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த இவர் தீவிரவாதியுடன் தங்கி யிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத் தியது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இவர் கொடுத்த தகவலின் பேரில் முனீப் ஷா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதில் வெளி மாநிலத்தவர் என்பதால் சந்தீப் குமாரை, லஷ்கர் தீவிரவாத அமைப்பு பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கொள்ளை அடிக்க வைத்துள்ளனர். அந்தப் பணத்தை அவர் லஷ்கர் அமைப்புக்கு வழங்கி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2012-ம் ஆண்டு காஷ்மீருக்கு வந்த சந்தீப், கோடைக்காலத்தில் வெல்டராக பணியாற்றி உள்ளார். குளிர் காலத்தில் காஷ்மீரை விட்டு வெளியேறி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பணியாற்றி உள்ளார். அங்கு தன்னுடன் பணியாற்றிய குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஹித் அகமதுவுடன் பழகி உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தெற்கு காஷ்மீருக்கு சந்தீப் மீண்டும் சென்றுள்ளார். சந்தீப், முனீப் ஷா, ஷாஹித் அகமது மற்றும் முசாபர் அகமது ஆகிய நால்வரும் குல்காம் பகுதியில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி உள்ளனர்.

அப்போது லஷ்கர் தீவிர வாதி ஷகூர் அகமதுவை சந்தித்துள் ளனர். இதுதான் இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு தொடக் கமாக அமைந்தது. ஏடிஎம்களில் கொள்ளை அடிப்பதற்கு சந்தீப்பை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர் அந்தப் பணத்தை பங்கிட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவங்கள் மட்டு மல்லாமல் தீவிரவாத செயலிலும் சந்தீப்பை ஈடுபடுத்தி உள்ளனர். குறிப்பாக ஜூன் 16-ம் தேதி தெற்கு காஷ்மீரில் உள்ள அச்சபால் பகுதியில் காவல் துறையினர் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் பலியாயினர்.

இதுபோல கடந்த ஜூன் 3-ம் தேதி லோயர் முண்டா பகுதி யில் ராணுவ வாகனம் மீதான தீவிர வாத தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். இந்த சம்பவங் களில் சந்தீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x