Last Updated : 07 Jul, 2017 10:26 AM

 

Published : 07 Jul 2017 10:26 AM
Last Updated : 07 Jul 2017 10:26 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் 11-ல் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 18-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதுவரையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலோ எதிர்க்கட்சிகள் சார்பிலோ வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலை யில், வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிகிறது. இவர் தொடர்ந்த 2-வது முறையாக இந்தப் பதவியை வகித்து வருகிறார். மாநிலங்களவை செயலாளர் ஷும்ஷர் கே.ஷெரிப் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x