Published : 07 Jul 2017 10:26 AM
Last Updated : 07 Jul 2017 10:26 AM
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 18-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதுவரையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலோ எதிர்க்கட்சிகள் சார்பிலோ வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலை யில், வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.
இப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிகிறது. இவர் தொடர்ந்த 2-வது முறையாக இந்தப் பதவியை வகித்து வருகிறார். மாநிலங்களவை செயலாளர் ஷும்ஷர் கே.ஷெரிப் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT