Published : 27 Nov 2014 11:41 AM
Last Updated : 27 Nov 2014 11:41 AM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2-ம் கட்ட தேர்தலையொட்டி அங்கு பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். சார்க் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இந்தியா திரும்புகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி, பூஞ்ச் மாவட்டத்தில் உத்தம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அம்மாநில பாஜக தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக, முதற்கட்ட தேர்தலையொட்டி நவம்பர் 22-ல் கிஸ்த்வார் மாவட்டத்தில் மோடி கலந்து கொண்ட பிரச்சாரத்தில் 40,000 பேர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT