Published : 04 Jun 2017 10:04 AM
Last Updated : 04 Jun 2017 10:04 AM
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார். விழா முடிந்ததும் நேற்றிரவு சென்னையிலேயே அவர் தங்கினார்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் என 300-க்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து ராகுல் காந்தி பேசுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பகல் 12 மணியளவில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். பின்னர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT