Last Updated : 01 Nov, 2014 09:56 AM

 

Published : 01 Nov 2014 09:56 AM
Last Updated : 01 Nov 2014 09:56 AM

டாக்டர்களை மிரட்டி பணம் பறிப்பு: டி.வி செய்தியாளர்கள் உள்பட 4 பேர் கைது - ரகசிய கேமரா மூலம் நூதன மோசடி

டாக்டர்களையும் மருத்துவ பரிசோதனைக் கூட உரிமையாளர் களையும் மிரட்டி பணம் பறித்து வந்த இரு டி.வி செய்தியாளர்கள், ஒரு பெண் உள்ளிட்ட 4 பேரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.

கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிக்கும் சோதனை உங்கள் மருத்துவமனையில் நடத்தப் படுகிறது. அதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் இருப்பது என தெரிவித்து மிரட்டி பணம் பறிப்பார்கள்.

கைதானவர்களில் தன் சிங் என்கிற தீபக்(30), ராம் சரண் ஆகியோர் தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு தகவல் அளிக்கும் சுயேச்சை செய்தியாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர் கள் தங்களிடம் உள்ள நவீன உளவு கேமராக்கள், மைக்குகள் மூலம் வேண்டுமென்றே நாடகம் நடத்தி சில வீடியோக்களை எடுத்து டாக்டர்கள், மருத்துவ பரிசோதனை மைய உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.

புஷ்பா (36) என்ற பெண் இவர்களுடன் சேர்ந்து கர்ப்பிணி போல நடித்து வீடியோக்களை எடுக்க உதவியுள்ளார். ஜெய் கோச்சார் என்ற நபரும் இவர்களுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அப்பெண்ணை தனியாக அனுப்பி தனது கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று கண்டுபிடித்து கூற வேண்டுமென டாக்டர்களிடம் கேட்க வைப்பார்கள். அதற்கு டாக்டர் ஒப்புக் கொண்டால் அவர் அப்பெண் வைத்துள்ள ரகசிய கேமராவில் சிக்கி விடுவார். அதன் பிறகு அதனை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறிப்பார்கள். இவர்கள் கடந்த ஓராண்டாக டெல்லியில் உள்ள 50 மருத்துவ மனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்களில் வீடியோ எடுத்து பணம் பறித் துள்ளனர்.

இவர்கள் நடத்திய நாடகம் குறித்து ஒரு மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x