Published : 02 Jan 2014 08:30 AM
Last Updated : 02 Jan 2014 08:30 AM

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 220 அதிகரிப்பு

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ. 220 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விலை நிலவரப்படி இந்த விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்புக்கு மேல் வாங்கப்படும் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.

இவ்வகையிலான மானியமில்லா சிலிண்டரின் விலை புதன்கிழமை முதல் ரூ. 220 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ரூ. 1,021க்கு விற்பனை செய்யப்பட்ட 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ. 1,241க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் ரூ.1,234க்கு விற்பனை செய்யப்படும்.

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். குளிர்காலம் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்திருப்பதே, விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x