Published : 21 Sep 2016 06:01 PM
Last Updated : 21 Sep 2016 06:01 PM
காவிரித் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்கு அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க இத்தகைய மேலாண்மை வாரியமே சிறந்த தெரிவு என்று மத்திய நதிநீர் ஆணைய (CWC) தலைவர் ஜி.எஸ்.ஜா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் அசோசேம் நிகழ்ச்சிகளுக்கிடையில் ஜி.எஸ்.ஜா கூறும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைக்கும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் இடம்பெறுவர் என்று தெரிவித்தார்.
“நீரைச் சேமித்து வைத்து தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கான போதிய வசதிகள் ஏற்படுத்தாவிட்டால் நீராதாரப் பாதுகாப்பு குறித்து நாம் ஒன்றுமே சிந்திக்க முடியாது. எனவே நீரைச் சேமித்துக் காக்கும் வழிமுறைகள் அவசியம்” என்றார் ஜா.
எனவே, மத்திய அரசு காவிரிப ்பிரச்சினையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி இந்த விவகாரங்களில் சுமுகத் தீர்வு காண காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறந்த வழியாகும் என்று கூறியுள்ளார் ஜி.எஸ்.ஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT