Published : 04 Jun 2017 10:19 AM
Last Updated : 04 Jun 2017 10:19 AM

நர்ஸ் கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் கைது

ராஜஸ்்தான் மாநிலம் ஜாலிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. அங்கு நர்ஸாக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அப்போதைய அமைச்சருமான மகிபால் மடெர்னாவுடன் தேவி நெருக்கமான இருப்பது போன்ற வீடியோ வெளியானது.

இதைத் தொடர்ந்து 2011 செப்டம்பர் 1-ம் தேதி அவர் திடீ ரென காணாமல் போனார். போலீஸ் விசாரணையில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் இந்திரா பிஸ்னோய் என்ற பெண் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். சுமார் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர் மத்தியப் பிரதேசம் தேவாஸ் அருகே நெமாவர் என்ற பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x