Published : 27 Nov 2014 05:11 PM
Last Updated : 27 Nov 2014 05:11 PM
கருப்பு பண விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மக்களவைக்கு திரிணமூல் எம்.பிக்கள் கருப்பு தூண்டு அணிந்து வந்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்திமக்களவைக்கு குளிர் காலகூட்டத் தொடருக்கு இன்று(வியாழன்) வந்த திரிணமூல் எம்.பிக்கள், கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு துண்டை அணிந்து வந்தனர்.
முன்னதாக நேற்று(புதன்கிழமை) திரிணமூல் எம்.பிக்கள் தங்கள் கையில் கருப்பு குடை ஏந்தி அவைக்கு நடுவே வந்து கூச்சலில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT