Published : 19 Nov 2014 01:03 PM
Last Updated : 19 Nov 2014 01:03 PM

சாமியார் ராம்பாலுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஹரியாணா டி.ஜி.பி

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பாலுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. அவர் சரணடைய வேண்டும் என ஹரியாணா போலீஸ் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

ராம்பாலை கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் தடுத்து வருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) அவரை கைது செய்ய சென்ற போலீஸார் மீது சாமியாரின் ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பு மோதலில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x