Published : 02 Feb 2017 08:55 AM
Last Updated : 02 Feb 2017 08:55 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:
இது முற்றிலும் முரணான பட்ஜெட். வெறும் வார்த்தை ஜாலம் கொண்ட பட்ஜெட். அண்மையில் பொருளாதார ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களுக்கு எதிராக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி பற்றாக்குறை 3.5 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைந்திருப்பதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதே நடப்பு நிதி பற்றாக்குறையின் சதவீதம் குறைந்ததற்கு காரணம். இந்த ஆண்டு 9 சதவீதத்துக்கும் குறைவாக வருவாய் எதிர்பார்ப்பதால், நடப்பு நிதி பற்றாக்குறையும் குறைவாகவே இருக்கும். அதாவது இது செலவினங்களுக்கு முரணாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த பட்ஜெட் முற்றிலும் முரணான பட்ஜெட் என்று தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT