Published : 24 Feb 2017 10:20 AM
Last Updated : 24 Feb 2017 10:20 AM
மணிப்பூர் மாநிலத்தின் நொனி மாவட்டம், கோவபும் என்ற கிராமத் தில் நேற்று அதிகாலை 3.30 மணி யளவில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி என்எஸ்சிஎன்-ஐஎம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி கொல்லப் பட்டார்.
மேலும் இரு தரப்பு மோதலில் சிக்கிக்கொண்ட அஞ்சினா ராங்மீ (50) என்ற கிராமவாசி உயிரிழந்தார்.
மணிப்பூரில் புதிதாக உரு வாக்கப்பட்ட 7 மாவட்டங்களில் நொனி மாவட்டமும் ஒன்றாகும். தாமங்லாங் மாவட்டத்தைப் பிரித்து இப்புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT