Published : 04 Jan 2014 01:35 PM
Last Updated : 04 Jan 2014 01:35 PM
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தன்னைப் பற்றி எழும் சர்ச்சைகளை பொருட்படுத்தாமல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு அளித்த 5 படுக்கை அறை கொண்ட 2 வீடுகளில் ஒன்றினை அலுவலகப் பணிகளுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொள்வதாக செய்த முடிவு, அவரை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கியது.
இந்நிலையில், அந்த வீட்டை ஏற்கப்போவதில்லை என்றும், மாறாக அளவில் சிறிய வீடு ஒன்றை பார்க்குமாறு கூறியுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேஜ்ரிவால் விளக்கமளித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "அரவிந்த் கெஜ்ரிவால் 5 படுக்கை அறை கொண்ட வீட்டினை ஏற்றுக் கொள்வதால் அவரை யாரும் கடிந்து கொள்ளப்போவதில்லை. ஆனால் அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நிச்சயமாக விமர்சனத்துக்கு உள்ளாவார்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படிப்பட்ட சர்ச்சைகளை சட்டை செய்யாமல், தேர்தல் வாக்குறுதிகள் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT