Published : 13 Jul 2016 07:45 AM
Last Updated : 13 Jul 2016 07:45 AM
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மேலும் 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இருந்தும் சிலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள் ளன. இதுதவிர ஐ.எஸ். அமைப் புக்கு ஆதரவாக சிலர் உள்நாட்டில் நிதி திரட்டி வருவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 29-ம் தேதி ஹைதராபாத்தில் 10 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக என்ஐஏ அதிகாரிகள் ஹைதராபாத்தில் நேற்றும் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஐ.எஸ். அமைப் புடன் தொடர்புடைய யாசிர் நைமுதுல்லா, ரஹ்மான் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் யாசிர் நைமுதுல்லா ஐ.எஸ். அமைப்பின் ஹைதராபாத் பிரிவு தலைவராக செயல்பட்டுள்ளார். ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, நிதி திரட்டுவது ஆகியவற்றில் யாசிர் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள் ளனர். கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் ரஹ்மான், ஐ.எஸ். அமைப்புக்கு அவ்வப்போது நிதியுதவிகளை வழங்கியுள் ளார். இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT