Published : 07 Oct 2013 10:07 AM
Last Updated : 07 Oct 2013 10:07 AM

பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

அணுஆயுதம் தாங்கிச் செல்லும் பிருத்வி-2 ரக ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

500கிலோ முதல் 1000கிலோ எடையில் அணு ஆயுதத்தை சுமந்து சென்று 350 கி.மீ., வரையிலான தொலைவில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது பிருத்வி 2 ஏவுகணை.

இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சோதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x