Published : 13 Apr 2017 01:35 PM
Last Updated : 13 Apr 2017 01:35 PM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை மாலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை அரசியல் கட்சிகளோ அல்லது நிபுணர்களோ நிரூபிக்கலாம் என தேர்தல் ஆணையம் சவால் விடுத்ததாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின.
இதை சுட்டிக்காட்டி கேஜ்ரிவால் இன்று (வியாழக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் கட்சிகளுக்கான சவால் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிக்கை ஏதும் அனுப்பவில்லை. ஆனால், தேர்தல் ஆணைய வட்டார தகவல் என்ற பெயரில் இச்செய்தி உலா வருகிறது.
தேர்தல் ஆணையம் ஏன் இதை 'தகவல்' என்ற பெயரில் கசியவிட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏன் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடக்கூடாது. அப்படியென்றால் தேர்தல் ஆணையம் வெறும் பெயரளவு அமைப்பு மட்டும்தானா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிக்கையை பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?" என அடுத்தடுத்த ட்வீட்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT