Published : 12 Aug 2016 02:16 PM
Last Updated : 12 Aug 2016 02:16 PM
மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து அந்தமானுக்குச் சென்ற ஏஎன் 32 ரக விமானம் வங்கக்கடல் மேலே சென்று கொண்டிருந்தபோது மாயமானது.
விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மாயமான ஏஎன்-32 விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே கூறும்போது, "விமானம் காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆன நிலையில் விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை.
மாயமான விமானங்களை தேடும் பணியில் சர்வதேச அளவில் சிக்கல் நிலவுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-யை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரெஞ்சு விமானத்தின் உடைந்த பாகங்கள் ஓராண்டுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கடலில் கிடைத்த 30 பொருட்களில் எதுவும் மாயமான விமானத்தின் உதிரிப் பாகம் இல்லை" என்றார்.
முன்னதாக மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மாயமான விமானத்தை தேடும் பணியை நிறுத்தக்கூடாது" என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT