Published : 28 Oct 2015 01:19 PM
Last Updated : 28 Oct 2015 01:19 PM

டெல்லி கேரள இல்லத்தில் மீண்டும் மாட்டிறைச்சி விற்பனை

டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் மீண்டும் மாட்டிறைச்சி விற்பனைத் தொடங்கியது. கேரள இல்ல அதிகாரி கே.ஜி. ஜோசப் இதனை தெரிவித்தார்.

கேரள பவனில் உள்ள உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு அம்மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. | விவரம் ->கேரளா பவன் 'மாட்டிறைச்சி' விவகாரம்: டெல்லி போலீஸ் 'சோதனை'யும் 10 முக்கிய தகவல்களும்

இதன் தொடர்ச்சியாக, கேரள பவன் மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு கூடிய கேரள எம்.பி.க்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கேரள பவனில் இன்று புதன்கிழமை மீண்டும் மாட்டிறைச்சி விற்பனை தொடங்கியது.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக புகார் அளித்த இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கைது செய்யப்பட்டார். இவரது புகாரின் அடிப்படையில்தான் திங்களன்று கேரளா இல்லத்தில் நுழைந்து போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட விஷ்ணு குப்தா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி தெரிவித்தார். இது தொடர்பான விரிவான செய்திக்கு - >கேரள இல்ல 'மாட்டிறைச்சி' புகார்: இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கைது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x