Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

மேகாலயத்தில் கடத்தப்பட்ட அரசு அதிகாரி மீட்பு

மேகாலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட அரசு அதிகாரி போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பட்டுப்புழு வேளாண்மைத் துறை அதிகாரி திலிப் தத்தா மெதி, கடந்த 14-ம் தேதி கடத்தப்பட்டார். இந்நிலையில், பொகோலமரியில் காவல் துறை கண்காணிப்பாளர் நிதுல் கோகோய் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தேடுதல் வேட்டையின்போது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் நடத்திய என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்கள் ரபா தேசிய விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x