Published : 16 May 2017 09:18 AM
Last Updated : 16 May 2017 09:18 AM

பக்தர்கள் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்த மத்திய அமைச்சர்

திருப்பதியில் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி சாதாரண பக்தர் களைப் போல வரிசையில் நின்று ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்.

கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் சுஜனா சவுத்ரி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு நேற்று வந்தார்.

அப்போது, தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு அவரை வரவேற்று, தரிசன ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் மத்திய அமைச்சர் சாதாரண பக்தர்களுடன் சேர்ந்தே சுவாமியை வழிபட விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி அவர் தனது குடும் பத்தினருடன் பக்தர்களுடன் வரிசையில் சென்று, 60 அடி தூரத்தில் இருந்து சுவாமியை தரிசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x