Published : 08 Jun 2016 02:48 PM
Last Updated : 08 Jun 2016 02:48 PM
தகவலுரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்த தகவலுக்கு பதில் அளித்த ஆர்பிஐ, கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர், அவர் இந்தியக் குடிமகன் என்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12, 2013 அன்று வந்த செய்தியில் ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு முன்னரே ரகுராம் ராஜன் குடியுரிமை குறித்து ஆர்டிஐ தகவல் கோரப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள ஆர்பிஐ ரகுராம் ராஜன் இந்தியக் குடியுரிமை பெற்றவர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கடந்த கால குடியுரிமை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது .
தனது ஆர்டிஐ மனு குறித்து விளக்கிய டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், எனது ஆர்டிஐ மனு பல அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் கையில் மாறி மாறி சென்று கடைசியாக மே 11 அன்று ஆர்பிஐ இடம் வந்து சேர்ந்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT